Tuesday 14th of May 2024 11:51:01 AM GMT

LANGUAGE - TAMIL
இந்தியன்-2 விபத்து குறித்து சங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது!

இந்தியன்-2 விபத்து குறித்து சங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது!


இந்தியன்-2 படப்பிடிப்புத்தள விபத்து குறித்து படத்தின் இயக்குநர் சங்கரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு நேரில் முன்னிலையாகியிருந்த இயக்குநர் சங்கரிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

மூன்று உயிர்களை பலியெடுத்த குறித்த விபத்தை ஏற்படுத்திய பாரம் தூக்கியை இயக்கியவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விபத்து ஏற்படும் போது சம்பவ இடத்தில் இருந்த ஆறு ஊழியர்களிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முன்னதாக, மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் சி.ஈஸ்வரமூர்த்தி, துணை ஆணையர் நாகஜோதி ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE